தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணையத்தில வெளியாகும் ஹிப் ஹாப் ஆதியின் ஆவணப்படம்! - தீ வீரன் ஆவணப்படம்

ஹிப் ஹாப் ஆதியின் 'தீ வீரன்' ஆவணப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆதி
ஆதி

By

Published : Apr 27, 2021, 6:13 AM IST

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட நட்சத்திரமாக ஜொலித்துவருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் கரோனா தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்த தமிழ்நாடு தீயணைப்புத் துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, 'தீ வீரன்' என்னும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த மார்ச் மாதத்தில், கரோனா தொற்று அதிகரித்த காலத்தில்தான் இவை அனைத்தும் தொடங்கியது. தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ராபின் அழைப்பின்பேரில், அம்பத்தூர் தீயணைப்பு அலுவலகத்தின் தினசரி நடவடிக்கைகளைப் பார்வையிடச் சென்றேன்.

என்னைப் பொறுத்தவரை தீயணைப்புத் துறையினர் என்பவர்கள் காவல் துறை போலவே உடை அணிபவர்கள். தீ விபத்து நேரிடும்போது மக்களுக்கு விரைந்து உதவுபவர்கள் என்ற எண்ணமே இருந்தது.

ஆனால் அவர்களுடன் ஒன்றாகச் செலவழித்த அரை நாளிலேயே, என் எண்ணம் சுக்குநூறாக உடைந்தது. அவர்களின் பணி குறித்து மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கை குறித்த எண்ணமும் முற்றாக மாறியது.

மிகவும் கடினமான இந்தக் கரோனா தொற்று காலத்தில் அனைவரும் வீட்டிலிருக்கும் நேரத்தில், உதவி தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் தீயணைப்பு வீரர்கள் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.

கடின காலத்தில் முன்களப் பணியாளர்களாக அவர்கள் முழு விருப்பத்துடனும், மகிழ்வுடனும் மக்களுக்கு உதவினார்கள். அவர்களுக்கு அவர்கள் குடும்பமும் துணையிருந்தது. இவையாவும் என்னுள் பெரும் மாற்றங்களையும், நேர்மறைத் தன்மையை உருவாக்கியதோடு, பெரும் நம்பிக்கையை விதைத்தது.

இவர்களின் உழைப்பை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென்கிற எண்ணம் என்னுள்ளத்தை வலுவாக ஆட்கொண்டது. தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் ராபினிடம் ஆவணப்படம் எடுக்கும் அனுமதியைக் கோரினேன்.

இந்த ஆவணப்படப் பதிவு காலத்தில் அங்கிருந்த ஊழியர்களுடன் தொடர்ந்து உரையாடியதில் அனைவரும் மிகுந்த நெருக்கமான உறவாக மாறிவிட்டார்கள். இந்த அனுபவம் எனது புறவாழ்க்கையை வெகுவாக மாற்றியது.

இது கலை வடிவமாக மாறும்போது காண்போருக்குப் பெரும் நம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். மேலும் உதவி தேவைப்படுவோருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்தெடுக்கும். இம்மாதிரியான தாக்கங்கள் என் வாழ்விலேயேயும் நடந்ததுள்ளது.

எனது சுய விருப்பத்தின்பேரில் நான் வாங்கிய மாடு, பின்னொரு நாளில் 'டக்கரு டக்கரு' உருவாகக் காரணமாக அமைந்தது. 2012ஆம் ஆண்டிலிருந்து சமூகம் குறித்து பல ஆவணப்படங்கள் எடுத்திருந்தாலும் 'டக்கரு டக்கரு' எங்களுக்குப் பெரியளவில் பெயர் பெற்றுத் தந்தது.

அதேபோல் 'தமிழி' தொடங்கியதும் சுய விருப்பத்தின்பேரில்தான், ஆனால் அதனை முடிக்க இரண்டாண்டு காலம் ஆனது. இறுதியாக எட்டு அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஆவணங்கள் குறித்த ஆவணப்படமாக அது உருமாறியது. அதேபோல்தான் 'மாணவன்' ஆவணப்படமும். இச்சமூகத்தில் மாணவனின் கடமை குறித்த அந்த ஆவணப்படம் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

தீயணைப்புத் துறையைப் பார்வையிட சென்ற ஒருநாள் பெரும் தாக்கத்தை உருவாக்கி, இப்போது 'தீ வீரன்' உருவாக ஓராண்டு கால நேரத்தை எடுத்துக்கொண்டது. நாம் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவும் நமது பார்வையும் சரியாக இருந்தால் மற்றவை நன்றாக நடக்கும். உங்களின் நம்பிக்கை உங்களைக் கைவிடாது. எங்களது இந்த ஓராண்டு பயணம் நிறைய நம்பிக்கை உழைப்பு, தியாகத்தினைக் கொண்டது.

இந்த ஆவணப்படத்தை உருவாக்கியது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த இனிய நேரத்தில் ஆவணப்படத்தை உருவாக்குவதில் முழு ஆதரவு தந்த, தமிழ்நாடு தீயணைப்புத் துறை முதன்மை அலுவலர் முனைவர் சி. சைலேந்திர பாபுவுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தோடு எங்களுக்கு முழு ஒத்துழைப்புத் தந்த மற்ற அலுவலர்களுக்கும், வீரர்களுக்கும், அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் இந்த 'தீ வீரன்' ஆவணப்படத்தைச் சமர்பிப்பதோடு, எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details