தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் போலி நீரேற்று: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள்

சென்னை: காவிரி நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தாமல் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் போலி நீரேற்று பாசன விவசாய கூட்டுறவு சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 21, 2020, 1:58 PM IST

திமுகவின் விவசாயிகள் அணிச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "காவிரியிலிருந்து திறந்துவிடப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் இடையே காவிரி நீர் திசை மாற்றப்படுகிறது.

அந்தப் பகுதிகளில் போலியான நீரேற்று பாசன விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுகிறது. அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

நீர் பாசன விவசாய சங்கங்கள் கிணற்று நீரைத் தான் எடுக்க முடியுமே தவிர காவிரி நீர் எடுக்க முடியாது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details