புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில்," எனது மகள் கௌரி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர், சிறு வயது முதலே கிராமப்புற வளர்ச்சி குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். அதில் ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய பாரம்பரியம், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
குறிப்பாக, எங்கள் பகுதியிலுள்ள தெருக்கள், அதன் பாரம்பரியம், கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், எங்கள் பகுதி தேவைக்காகவும், ஏரி, குளம் போன்றவற்றை அப்பகுதி மக்கள் குழுவை உருவாக்கியது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதன் பேரில், கிராம புள்ளிவிவர (DATA) பதிவை உருவாக்கியுள்ளார்.
இந்த கிராம பதிவை கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டுகள் வாரியாக அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் போல கிராம ஆட்சியர் என்ற ஒரு பதவியை கிராமந்தோறும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.