சென்னை:அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற உள்ள நிலையில் வானகரத்திலுள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அரங்கத்தின் முன் பகுதியில் கோட்டை போன்று பிரம்மாண்டமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுக்குழு நடைபெறும் இடம் முழுவதும் ஓபிஎஸ் படங்கள் ஏதும் இடம் பெறவில்லை, ஈபிஎஸ் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
மேலும் பொதுகுழுவை சாராதவர்கள் உள்ளே நுழைந்து அசம்பாவிதம் செய்யாமல் இருப்பதற்காக ஒவ்வொரு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, சோதனை செய்து உள்ளே அனுப்ப பிரத்தியேகமாக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.