தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைக்கவசம் வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - helmet case

சென்னை: தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jun 13, 2019, 8:02 AM IST

தமிழ்நாட்டில் பெருகிவரும் வாகன விபத்தை தடுக்க இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது தலைக்கவசம் அணியாமல் பயணித்தது தொடர்பாக ஆறு நாட்களில் 21 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஸ்வைபிங் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கும் முறையை வங்கிகளுடன் இணைக்கும் பணி முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும் ஸ்வைபிங் இயந்திரம் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, 2004இல் விபத்து மரணங்கள் 6,419 ஆக இருந்தது, 2018இல் 21,300 ஆக அதிகரித்துள்ளதே என நீதிபதிகள் கேட்டபோது, தலைக்கவசம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு தற்போது சிறப்பாக உள்ளது இதே நிலையில் தொடர்ந்து செயல்பட்டால் முழுமையாக தலைக்கவசம் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, மாவட்டங்களில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதிகாரத்தை சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு (SSI) ஏன் வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநிலம் முழுவதும் போக்குவரத்து உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details