தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் ஓவர்: சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - chennai suburban area traffic news

சென்னை: தொடர் பொங்கல் விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்தில் பயணிகள் சென்னை திரும்பியதால் செங்கல்பட்டு சுங்கச் சாவடியிலிருந்து பெருங்களத்தூர் வரை இன்று (ஜன.17) மாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

chennai suburban area traffic
சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

By

Published : Jan 17, 2021, 9:08 PM IST

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுமார் 6 லட்சம் பேர் சென்றிருந்தனர். சென்னையில் இருந்து 16 ஆயிரத்து 221 சிறப்பு பேருந்துகள் கடந்த ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து இயக்கப்பட்டன.

பொங்கலுக்குப் பிறகு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2 ஆயிரத்து 50 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5ஆயிரத்து 727 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் விடுமுறை முடிந்து நாளை பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில், அனைத்து பயணிகளும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசையாக நின்று காட்சியளிக்கின்றன.

நேற்றைய தினமே (ஜனவரி 16) பெரும்பாலான பயணிகள் திரும்பினாலும், இன்று விடுமுறையின் கடைசி தினம் என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு இதுவும் காரணம்

தமிழ்நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை கட்டாயம். இருப்பினும் பெரும்பாலானோர் அம்முறையை பின்பற்றாமல் கட்டணம் செலுத்துகின்றனர். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

இந்த வாகன நெரிசல் இன்றிரவு முதல் அதிகாலை வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னைக்கு மேலும் அழகு சேர்க்கும் தூண் பூங்கா!

ABOUT THE AUTHOR

...view details