இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு புதிய தகவலை தெரிவித்திருக்கிறது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சிக் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்-29) தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்; குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.