தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2021, 9:30 AM IST

Updated : Nov 7, 2021, 10:06 AM IST

ETV Bharat / state

சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rain  chance for heavy rain in chennai  chennai news  chennai latest news  heavy rain  heavy rain in chennai  rain  rain update  flood  chennai metrological center  metrological center  சென்னையில் கனமழை  மழை  கனமழை  சென்னை செய்திகள்  வானிலை அறிக்கை  வானிலை ஆய்வு மையம்  சென்னை வானிலை ஆய்வு மையம்  குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு  சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி
மழை

சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று (நவ.6) இரவு தொடங்கிய மழை விடிய விடியக் கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. விடாமல் பெய்து வரும் கனமழை மேலும் மூன்று மணி நேரத்திற்குத் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகம் அமைந்துள்ளபகுதியில் 226.80 மி.மீ, அம்பத்தூர் 205 மி.மீ , நுங்கம்பாக்கத்தில் 158.90 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர்

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

திருவள்ளூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணத்தால் முன்னெச்சரிக்கையாக இன்று (நவ. 7) காலை 11 மணிக்குப் புழல் ஏரியிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. மேலும், சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ. 7) பிற்பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

நேற்றிரவு முதல் மதுரை, தஞ்சை, விழுப்புரம், கரூர், தருமபுரி, சேலம், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தால், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

இதையும் படிங்க: பேரிடர் காலங்களில் புகார் தெரிவிக்க 'தொலைபேசி எண்’ அறிவித்துள்ளது - சென்னை மாநகராட்சி

Last Updated : Nov 7, 2021, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details