சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயதான பெண் ஒருவர் இருதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல் நிலை மிக மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்நிலையில், மதுரை சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தமிழ் மணி (21) என்ற இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அவரது உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.