கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், முக்கிய வழக்குகளை தவிர பிற வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பிணை கேட்டும், ஏற்கனவே பெற்ற பிணையில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால், இந்த வழக்குகளை நீதிபதி தன் வீட்டில் இருந்தபடியே விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் கருத்தையும் கேட்கும் விதமாக தொலைபேசியில், குற்றவியல் வக்கீல் பிரபாகரனிடம், நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில், 58 வழக்குகளை விசாரித்தார். இதில், கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு இடைக்கால பிணை வழங்கி நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.