தமிழ்நாடு

tamil nadu

ஹாத்ராஸ் சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யக் கூடாது - எல். முருகன்

By

Published : Oct 4, 2020, 8:42 PM IST

சென்னை: ஹாத்ராஸ் சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்ச் சந்திப்பு...!
பாஜக மாநில தலைவர் எல் முருகன் செய்தியாளர்ச் சந்திப்பு...!

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஹாத்ராஸ் சம்பவத்தை பொறுத்தவரை யோகி ஆதித்யநாத் ஏற்கனவே வழக்கை எஸ்.ஐ.டி. மூலம் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு. இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளை வைத்து மொத்த சட்ட ஒழுங்கையும் குறை சொல்லக் கூடாது. இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது” என்றார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், அதிமுக உட்கட்சி பூசல் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த முருகன், அதிமுகவில் நடப்பது அவர்களுடைய கட்சியின் விவகாரம். அதில் தான் கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...அலுவலகத்தில் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் - மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கை கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details