தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2021, 6:17 AM IST

ETV Bharat / state

கப்பலில் ஏகே 47 கடத்திய ஆறு பேர் கைது!

சென்னை: பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் இணைந்து போதைப் பொருள், ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களை கடத்திய இலங்கையைச் சேர்ந்த ஆறு பேரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

கப்பலில் ஏகே 47 கடத்திய ஆறு பேர் கைது
கப்பலில் ஏகே 47 கடத்திய ஆறு பேர் கைது

இந்திய கடலோரம் வழியாக விலை உயர்ந்த போதைப் பொருள், பயங்கர ஆயுதங்கள் கடத்தி வருவதாக மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கும், இந்திய கடலோர காவல் படையினருக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதிக்கு விரைந்த அலுவலர்கள் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த கப்பலை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில், 300 கிலோ ஹெராயின் என்னும் போதைப் பொருளை, தண்ணீர் டேங்கில் மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் முறை சுடக்கூடிய 9mm புல்லட்டுகள் இருந்ததையும் கண்டறிந்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, இலங்கை நாட்டைச் சேர்ந்த நந்தனா, தாஸ் பிரியா, குணசேகரா, செனாரத், ரனசிங்கா, நிசாங்கா ஆகியோரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.

இது குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடத்தியது தெரியவந்தது.

இந்தக் கும்பலும், பிப்.11ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் 150 கிலோ மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருள்களை கடத்தி அலுவலர்களிடம் சிக்கியதும் ஒரே கும்பல் தான் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: சர்வதேச கடத்தல் மன்னன் பெங்களூருவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details