டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பலர் சிபிசிஐடியினரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே உதவியாளராக பணிபுரிந்துவந்த கல்பனா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், கல்பனா சென்னை முகப்பேரில், முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளதும் தனது கணவர் மூலம், பணம் கொடுத்து பணிக்கு அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.