தமிழ்நாடு

tamil nadu

குரூப் 2ஏ முறைகேடு: டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்

By

Published : Feb 8, 2020, 7:16 PM IST

சென்னை: குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலயே பணி செய்துவந்த பெண் ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

suspended
suspended

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பலர் சிபிசிஐடியினரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே உதவியாளராக பணிபுரிந்துவந்த கல்பனா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், கல்பனா சென்னை முகப்பேரில், முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளதும் தனது கணவர் மூலம், பணம் கொடுத்து பணிக்கு அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும் இதேபோல் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணை தொடர்ந்துவருகிறது. ஆனால் கல்பனா இன்னும் கைது செய்யவில்லை என்பதும் அவர் தேர்வாணையம் அளித்த 42 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரூப்-2ஏ முறைகேடு வழக்கில் மேலும் மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details