தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரமல் நிறுவனத்துக்கு ரூ.3.20 கோடி அபராதம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு! - பிரமல்

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் திக்வல் கிராமத்தில் அமைந்துள்ள பிரமல் மருந்தக நிறுவனம் நிலத்தடி நீரை மாசுபடுத்தியதற்காக 3,20,400,00 ரூபாயை இழப்பீடாக வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

green-tribunal-orders-3-dot-20-crore-fine-for-piramal-pharma-company
பிரமல் நிறுவனத்துக்கு 3.20 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

By

Published : Jul 18, 2021, 7:22 AM IST

சென்னை:பிரமல் மருந்தக நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாக லக்ஷ்மி ரெட்டி என்பவர் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆய்வுக்கு உத்தரவு

அதன் பின்னர் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு குழு ஒன்றை அமைத்து நிலத்தடி நீரை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. பின்னர் அந்தக் குழு ஆய்வு செய்து நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது, மழை நீர் சேகரிக்கும் குழிகள் முறையாக இல்லை என அறிக்கை சமர்ப்பித்தது.

மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதியின் படி 1386 நாட்களுக்கு ஒரு நாள் வீதம் 60,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், மொத்தம் 8,31,60000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இழப்பீடு தொகையை மருந்தக நிறுவனத்திடமிருந்து தெலங்கானா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் பெற்றுக்கொள்ளுமாறு டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், தெலங்கானா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிரமல் நிறுவனத்திடமிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ரூ. 99 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை பெற்று கொண்டது.

பிரமல் நிறுவனத்தின் வழக்கு

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரமல் நிறுவனம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை தள்ளுபடி செய்யுமாறு வழக்கு தொடுத்தது. அதில், தெலங்கானா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் தங்களது நிறுவனத்தை நல்ல முறையில் ஆய்வு செய்யவில்லை என குறிப்பிட்டிருந்தது.

சென்னை ஐஐடி, ஒரு சில நிறுவனங்களை பிரமல் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விதிமீறலை இறுதி ஆய்வு செய்ய தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு

எனினும் இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாடு விதிகளை மீறியதாக கூறப்பட்டதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிரமல் நிறுவனத்தை இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அதன் பிறகு பிரமல் நிறுவனம் மொத்த தொகையிலிருந்து 50 விழுக்காடு பணத்தை செலுத்தியது. மீதமுள்ள 3,20,40,000 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.

மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறினால் தெலங்கானா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம், அந்த நிறுவனத்திடமிருந்து எப்படி இழப்பீட்டை வசூல் செய்யலாம் என முடிவு எடுத்துக்கொள்ளலாம் என ஆணையிட்டுள்ளது.

இதையும் படிங்க:மேகதாது அணை விவகாரம் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய குழு அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details