தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகாரத்தைப் பயன்படுத்துமா கிராம சபைகள்? - அதிகாரத்தை பயன்படுத்துமா கிராம சபைகள்

கிராம சபை பெயரளவில் செயல்பட்டுவருவதாக விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், தற்போதையை காலகட்டத்தில் அதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதால் அதனைப் பயன்படுத்தி கிராம சபைகள் தனக்குள்ள அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்துமா என்ற வினா எழுகிறது. அதற்கு விடை தேட முயலும் சிறு கட்டுரை இதோ...

கிராம சபை
கிராம சபை

By

Published : Jan 26, 2020, 5:14 PM IST

Updated : Jan 26, 2020, 10:01 PM IST

ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக இயங்க வேண்டும், நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக கிராம சுயாட்சி இருக்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நிறைவேற்றுவது வெகு தொலைவில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதனை அரசியலமைப்பும் உறுதி செய்துள்ளது.

பல விவகாரங்களில் காந்தியடிகளுடன் மாற்று கருத்தைக் கொண்ட அம்பேத்கர் அதிகாரக் குவியலைக் கடுமையாக விமர்சித்தார். பஞ்சாயத்து நிர்வாகம் திறம்பட செயல்பட உதவுவது கிராமசபை. அரசியலமைப்பின்படி பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகளில் மிகவும் வலிமைவாய்ந்தது கிராம சபையாகும்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்றவற்றில் மக்கள் பிரதிநிதிகளே ஆட்சி நடத்துவர். ஆனால், கிராம சபைகளில் மக்களே நேரடியாகப் பங்கு பெறுவர். அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படமால் தட்டி கழிக்கப்படுகிறது.

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாள்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதைத்தவிர கிராம ஊராட்சித் தலைவர் விரும்பும்போது சிறப்புக் கூட்டங்களை நடத்தலாம். நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை நிர்வாகம் செய்யும் கிராம சபைகளில் எம்மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி விளக்க குத்தம்பாக்கம் இளங்கோ ரங்கசாமியை அணுகினோம்.

யார் இந்த இளங்கோ?

22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞர், மத்திய மின்சார வேதியியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை விஞ்ஞானி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தனது கிராமத்திற்குச் சென்று பஞ்சாயத்து தேர்தலில் போட்டி போட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டில் ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கினார். அவர்தான் குத்தம்பாக்கம் இளங்கோ ரங்கசாமி.

1996 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், இரண்டு முறை பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகள் குறித்தும் கிராம சபையின் அதிகாரங்கள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

குத்தம்பாக்கம் இளங்கோ

கிராம சபைகள் இயங்கும்முறை குறித்து விளக்கும் அவர், "கிராம சபைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த இடதுசாரிகள் கேரளாவில் இயக்கம் தொடங்கினர். 73ஆவது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள கிராம சபைகள் அங்குதான் சரியாக இயக்கப்பட்டுவருகிறது.

கிராம அளவில் திட்டம் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது. இதுவே, பஞ்சாயத்திற்கான திட்டங்களாக வகுக்கப்படுகிறது. மாநிலத்தின் கொள்கை முடிவுகள் எடுப்பதில் கிராம சபைகள் முக்கிய பங்காற்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'தேசிய விவசாய கொள்கையால் பயனில்லை' - எம்.எஸ். சுவாமிநாதன்

Last Updated : Jan 26, 2020, 10:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details