தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 12, 2021, 9:11 PM IST

ETV Bharat / state

பள்ளி வாசல்களுக்கு 8ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி: தமிழ்நாடு அரசு அறிவிப்பிற்கு இஸ்லாமியர்கள் நன்றி!

சென்னை: ரம்ஜானை முன்னிட்டு 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக அறிவித்த அரசுக்கு இஸ்லாமிய சமூகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளரைச் சந்தித்த ஜெ.எம். பஷீர்
செய்தியாளரைச் சந்தித்த ஜெ.எம். பஷீர்

சென்னை: ரம்ஜானை முன்னிட்டு, 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஜெ.எம். பஷீர் (கழக சிறுபான்மை பிரிவு) நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, “தலைமைச் செயலாளரிடம் நேற்று (ஏப்.11) நோன்பு கஞ்சி தயாரிக்க 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி பள்ளி வாசலுக்குத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

செய்தியாளரைச் சந்தித்த ஜெ.எம். பஷீர்

எங்களது கோரிக்கையை ஏற்று 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று அரசு ஆணை வழங்கியதற்கு தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக நன்றி” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் - அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details