சென்னை: ரம்ஜானை முன்னிட்டு, 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஜெ.எம். பஷீர் (கழக சிறுபான்மை பிரிவு) நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, “தலைமைச் செயலாளரிடம் நேற்று (ஏப்.11) நோன்பு கஞ்சி தயாரிக்க 8 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி பள்ளி வாசலுக்குத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.