முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, மெரினா கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் 50.80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதிமுகவின் தற்போதைய ஆட்சிகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் நினைவிடத்தைத் திறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நினைவிடத்திற்கான இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபத்தில், அருங்காட்சியகம், அறிவியல் பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிக்கு 12 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அதன்படி செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, அரசிடம், 12.32 கோடி ரூபாய் கேட்கப்பட்டிருந்தது.