தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 31, 2022, 12:13 PM IST

ETV Bharat / state

சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு மரியாதை

சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 ஆவது பிறந்த நாளான இன்று அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு ஆளுநர்கள் மரியாதை
சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு ஆளுநர்கள் மரியாதை

சென்னை:சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர் அவரின் பிறந்த நாளன்று இந்தியாவில் ஒற்றுமை வலியுறுத்தும் வகையில் யூனிட்டி இந்தியா என்ற பெயரில் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேலின் 147 வது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் அமைந்துள்ள தான் திருவுருவ சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், சர்தார் வல்லபாய் பட்டேல் மெமோரியல் டிரஸ்ட் தலைவர் தவே, நல்லி குப்புசாமி உள்ளிட்டவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:மோர்பி பாலம் விபத்து: பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details