தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் இரங்கல்

சென்னை : திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தனின் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 26, 2020, 7:30 PM IST

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி கேட்டு தான் மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகவும், அவர் சிறந்த முறையில் மக்கள் பணி ஆற்றியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்காராக அவர் இரண்டு முறை பணியாற்றியதைக் குறிப்பிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுப்பிரமணிய ஆதித்தனின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிமுகவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றார்.

மேலும், சுப்பிரமணிய ஆதித்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்கவும், அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் பன்வாரி லால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :கோவிட்-19இல் இருந்து மீளலாம்; போதையில் இருந்து மீள முடியாது - ஏ.ஆர். ரஹ்மான்

ABOUT THE AUTHOR

...view details