இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவிட் 19 தொற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ரூ .1 கோடி நன்கொடை அளித்துள்ளார். கோவிட்- 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், தமிழ்நாட்டின் ஆளுநர் விருப்பப்படி மானியங்களிலிருந்து நமது நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் நிதி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ஆகியவற்றிக்கு 2 கோடி ரூபாய் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.