தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு: ஆளுநர் பன்வாரிலால் இரங்கல்!

By

Published : Sep 27, 2020, 6:39 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால்
ஆளுநர் பன்வாரிலால்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவையறிந்து வருத்தம் அடைகிறேன். மேலும், மத்திய அரசில் நிதி வெளிவிவகார மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு முத்திரை பதித்துள்ளார்.

இந்திய ராணுவ அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவர் எளிமை, பணிவு, ஆளுமை திறன், நல் உறவுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதுடன், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இந்திய தேசத்திற்காகவும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவரின் மறைவு இந்திய மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜஸ்வந்த் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details