இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "க. அன்பழகனின் மறைவுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் அவர் தமிழ் பேராசிரியராகத் தனது பணியை தொடங்கினார். பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் மொழியில் நல்ல ஆளுமையையும் நல்ல பேச்சாற்றலையும் கொண்டவர். தனது அரசியல் வாழ்வில் இதுவரை 70 ஆண்டுகள் கடத்திய இவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மறக்கமுடியாதது. அவரது மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும், குறிப்பாக திமுக தலைவருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் பெரும் இழப்பாகும்.