தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2020, 12:55 AM IST

ETV Bharat / state

தமிழ்நாடு அரசு ரூபாய் இரண்டாயிரம் கோடியில் பங்கு பிணைய பத்திரங்கள் விற்பனை செய்ய அறிவிப்பு!

சென்னை: பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்பில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ரூபாய் இரண்டாயிரம் கோடியில் பிணைய பத்திரங்கள் விற்பனை செய்ய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ரூபாய் இரண்டாயிரம் கோடியில் பிணைய பத்திரங்கள் விற்பனை செய்ய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஐந்து ஆண்டு காலங்களுக்கு ரூபாய் ஆயிரம் கோடி, பத்து ஆண்டு காலங்களுக்கு ரூபாய் ஆயிரம் கோடி ஆக ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் எதிர்வரும் மே 12,ஆம் தேதி நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு ரூபாய் இரண்டாயிரம் கோடியில் பிணைய பத்திரங்கள் விற்பனை செய்ய அறிவிப்பு

போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution E-KuberSystem) மின்னணு படிவத்தில் (Electronic format) மே 12ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details