தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிகரித்த நீரிழிவு நோய்...கால் அகற்றக் கெடு' - வலிக்குப்  பயந்து தூக்கில் தொங்கிய அரசு ஊழியர்! - Government employee who was hanged for fear of amputation of one leg

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு ஊழியர், மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை

By

Published : Nov 18, 2019, 11:21 AM IST

சென்னை வியாசர்பாடி கிருஷ்ணமூர்த்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(41). இவர் தரமணியில் உள்ள தமிழ்நாடு அச்சுத் துறை அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பல மாதங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர், மருத்துவரின் அறிவுரைப்படி கடந்த மாதம் 29ஆம் தேதி சிகிச்சைக்காக, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் நீரிழிவு நோய் அதிகமானதால் அர்ஜுனனின் ஒரு காலை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்படும் வலிக்குப் பயந்து கழிவறைக்குச் சென்று, அர்ஜூனன் தனது போர்வையை வைத்து ஜன்னலில் தூக்கு மாட்டிக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்த அவரது மனைவி காவல் துறைக்குத் தகவல் அளித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருவல்லிக்கேணி காவல்துறை , உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோசா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details