சென்னை: சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்.7) நடைபெற்றது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரையில், "தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும் அதிமுகவினர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட முழுமையாக மின் இணைப்பை வழங்கவில்லை.
2011-2016 ஆம் ஆண்டுகளில் 82 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளும், 2016-2021 ஆம் ஆண்டுகளில் 1.38 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
2006-2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அனல் மின் நிலையங்கள் மூலம் 85 விழுக்காடு என இருந்த மின் உற்பத்தி 2011-2016 ஆம் ஆண்டுகளில் 78 விழுக்காடு என குறைந்துள்ளது. பின்னர் 2016-2021 ஆம் ஆண்களில் 58 விழுக்காடு என குறைந்துள்ளது.