தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2019, 12:39 PM IST

ETV Bharat / state

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஆட்சி சந்தர்பவாத அரசியல் - திருநாவுகரசர் கருத்து

சென்னை: பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைத்தது ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் சரியானதல்ல என்றும் இது முழுமையான சந்தர்ப்பவாத அரசியலாகும் எனவும் காங்கிரஸ் எம்.பி திருநாவுகரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுகரசர் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மகாராட்டிராவில் பா.ஜ.க.விற்கு மக்கள் எதிராக வாக்களித்ததால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் கருத்தை ஏற்று மற்ற 3 கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டன.

இந்நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைத்தது ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் சரியானதல்ல. இது முழுமையான சந்தர்ப்பவாத அரசியலாகும்.

மகாராஷ்டிராவில் தேர்தலை தவிர்க்க பா.ஜ.க. இல்லாத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தது. ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க விரும்பவும் இல்லை. சிவசேனா தான் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஆதரவு தந்தது.

திடீர் திருப்பத்தால் ஏற்பட்ட இந்த ஆட்சி, ஒரு நாள் திடீர் திருப்பமாக கலைந்துவிடும். பா.ஜ.க.வுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அதிக நாள் தொடர முடியாது என்று நினைக்கிறேன். கொள்கை ரீதியில் 2 கட்சிகளும் 2 துருவங்கள். 2 கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சியை தொடர்வது கஷ்டமாக இருக்கும். நீண்ட நாள் நிலைக்கக் கூடிய வாய்ப்பு கிடையாது என்றார்.

திருநாவுகரசர் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. சென்னையில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு தடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு தெரியாமல் கஞ்சா விற்க முடியாது என்றார்.

இதையும் படிங்க:'திருவள்ளுவர் சிலைக்கு காவி போர்த்தப்படுவதால் பாஜகவுக்கு எந்தப் பலனும் இல்லை' - திருநாவுக்கரசர் எம்.பி!

ABOUT THE AUTHOR

...view details