சென்னை: நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற இன்று(ஜுன்.1) முதல் நான்கு நாட்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஜுன் 7ஆம் தேதிவரை தளர்வுகற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையாதப் பொருள்கள், கரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட நல உதவிகள் தொடர்ந்து பெறும் வண்ணம் நியாயவிலைக் கடைகள் தினந்தோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வண்ணம் ஏற்கெனவே முந்தைய மாதங்களில் கடைப்பிடித்தது போலவே வரும் ஜுன் மாதம் முதல் டோக்கன் முறையில் நியாயவிலைக் கடையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. அந்த டோக்கன்களில் நாள், நேரம் அச்சிடப்பட்டிருக்கும். அதன்படி மக்கள் தங்களது நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை பெற்றுச் செல்லலாம்.