தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2021, 10:29 PM IST

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.53 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

துபாய், சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.2.53 கோடி மதிப்புடைய 5.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Gold worth Rs 2.53 crore seized at Chennai airport
Gold worth Rs 2.53 crore seized at Chennai airport

சென்னை:துபாய்,சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.2.53 கோடி மதிப்புடைய 5.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், இதுதொடர்பாக சென்னை, திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 7 பயணிகளை கைதுசெய்தனர்.

மேலும் சென்னையிலிருந்து சாா்ஜாவுக்கு கடத்தமுயன்ற வெளிநாட்டு பணம் ரூ.24 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையைச் சோ்ந்த 4 பயணிகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 11 பயணிகள் கைது செய்யப்பட்டு , அவா்களிடமிருந்து ரூ.2.77 கோடி மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணிகள் தங்கம் , வெளிநாட்டு பணத்தை கடத்துவதற்காக வித்தியாசமாக தலையில் அணிந்துள்ள விக்குகள், காலுறைகள் (சாக்ஸ்கள்) ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே மனைவியை கொலை செய்த கணவர்

ABOUT THE AUTHOR

...view details