தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீட்பு விமானத்தில் தங்கக் கடத்தல்: ஒருவர் கைது - சென்னை சர்வதேச விமான நிலையம்

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் ரூ.19 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கம்
கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கம்

By

Published : Oct 29, 2020, 10:28 PM IST

Updated : Oct 29, 2020, 10:34 PM IST

துபாயிலிருந்து மீட்பு விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த அனைவரையும் சுங்கத்துறையினா் பரிசோதித்தனா்.

அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனா். அதோடு அவருடைய உடமைகளை சோதனையிட்டனா்.

பின்பு தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனா். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் இரண்டு தங்கப்பசை உருளைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அதன் மொத்த எடை 372 கிராம், மதிப்பு ரூபாய் 19 லட்சம் ஆகும். இதனையடுத்து பயணியை கைதுசெய்த சுங்கத்துறையினர், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Oct 29, 2020, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details