தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புளூடூத் இயா் பட்ஸ்களுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து புளூடூத் இயா் பட்ஸ்களுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 1.25 கோடி ரூபாய் மதிப்புடைய 2.85 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

By

Published : Oct 13, 2022, 8:38 PM IST

gold
gold

சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 3 பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் ஆடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது உடைமைகளையும் பரிசோதித்தபோது, அதில் ஏராளமான ப்ளூடூத், இயர் பட்ஸ்கள் இருந்தன. அவற்றை கழற்றி சோதித்தபோது, அவற்றினுள் தங்க அச்சுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பயணிகளிடமிருந்து, சுமார் 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.85 கிலோ தங்கத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மூன்று பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விரைந்து தகவல் பரிமாற மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி

ABOUT THE AUTHOR

...view details