தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 4:07 PM IST

ETV Bharat / state

Gold Rate Today:மீண்டும் 44 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை உயர்ந்து உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்து மீண்டும் 44,000 நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் 44 ஆயிரத்தை நெருங்கும் தங்கவிலை.....நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
மீண்டும் 44 ஆயிரத்தை நெருங்கும் தங்கவிலை.....நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னை:சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து, தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டை பொருத்து தங்கம் விலை நீர்ணயம் செய்யப்படுகிறது, கடந்த வாரத்தில் இறங்கு முகமாக இருந்த தங்கம். இன்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (ஆகஸ்ட்-24) தங்கம் விலை நான்காவது நாளாக உயர்ந்து உள்ளது. 22-கேரட் தங்கம் சவரன் ரூ.ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் சவரனுக்கு மீண்டும் 44,000 நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் தங்கம், தங்கம் ஏறுவது, குறைவதுமாகவே இருந்து வருகிறது.

இந்த மாதத்தொடக்கத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஜுலை மாதத்தை ஓப்பிடுகையில் சற்று அதிகரித்து இருந்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் ஏழாம் தேதி 7ம் தேதி ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு ஆகஸ்ட் 8ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,320க்கு விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை, அடுத்த நாட்களில் தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக ரூ.40 வித்தியாசத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில்.. இன்று(ஆகஸ்ட்-24) காலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.

44-ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை:மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூ.45 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது. தற்போது தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக 43,500- 43,600 வரை இருந்து வந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை 44,000 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

4-ஆவது நாளாக அதிகரித்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட்-24) கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,480-க்கும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840-க்கும் விற்பனையாகி வருகின்றன. இதேப்போல் .வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.80,000 ஆக இருக்கிறது.

இனி எப்படி தங்கத்தின் விலை:தொடர்ந்து சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில் இரண்டு வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து, தற்போது தங்கத்தின் விலை சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டடை பொருத்து இருக்கிறது.. இது வரவிருக்கும் நாள்களிலும் தொடருமா? இல்லை மீண்டும் தங்கத்தின் விலை உயருமா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:நிலவில் என்ன செய்யப் போகிறது ரோவர் - 14 நாட்கள் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்!

ABOUT THE AUTHOR

...view details