சென்னை:தமிழ்நாடுகூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அத்தொகுதிக்கு உள்பட்ட 165 பயனாளிகளுக்கு ஐந்து பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நகைகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
சென்னை மாவட்டத்தில் செயல்படும் 16 கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உள்பட்டு, பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு 13 ஆயிரத்து 595 பயனாளிகள் தகுதி பெற்று, அவர்கள் நகைகளுக்கு ஈடாகப் பெற்ற கடன் தொகை ரூ.66.75 கோடி (அசல் மற்றும் வட்டியுடன்) தள்ளுபடி செய்து தள்ளுபடி சான்றிதழ் மற்றும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, " தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அது தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.