சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன், "தமாகா சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் கோட்டையில் உள்ளவர்கள் காதில் விழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தமாகா வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு பணியாற்ற வேண்டும்.
ஆர்ப்பாட்டம் தொடரும்
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தான் மக்கள் நம்பி வாக்குகளை அளித்தார்கள். ஆனால் அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை.
திமுக அரசு தப்பித்து வருகிறது
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக, பாஜகவை குறை கூறியே திமுக அரசு தப்பித்து வருகிறது. அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
தேர்தலுக்கு முன்பு, பதவிக்கு வந்த உடன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு தற்போது 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறுவது ஏற்க முடியாது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம்