தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறை அலட்சியத்தால்  தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா! - சென்னை

சென்னை : காவல் துறை அலட்சியத்தால் கஞ்சா வியாபாரி ரம்யா தப்பி ஓடினார். அவரை காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.

ganja aquest escape

By

Published : Nov 15, 2019, 10:14 PM IST

சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இளைஞர்கள் இருவரிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர். இதனால், அவர்களைக் காவல் நிலையம் கொண்டு சென்று சோதனை செய்த போது, இருவரிடம் 15 கஞ்சாப் பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

மேற்கொண்டு, அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் ரம்யா என்பவர் தங்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கூறியதின் பேரில், அப்பெண்ணின் வீட்டிற்கும் காவல்துறையினர் சென்றனர். அப்போது, காவல்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு இருந்து 1.5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், செங்குன்றம் காவல்துரையினர் வழக்குப்பதிந்து, மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் இரண்டு இளைஞர்களையும் புழல் சிறையில் அடைத்தனர்.

அதன்பின்,இரவில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரம்யாவைக் கைது செய்த காவல்துறையினர், இரவு நேரம் காரணமாக புழல் ஜெயிலில் அடைக்க முடியாமல், பால்பண்ணை அருகிலுள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

கஞ்சா வியாபாரி ரம்யா

அங்கு தகுந்த காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாததால், அப்பெண் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் ரம்யாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் - பாத்திமாவின் தந்தை

ABOUT THE AUTHOR

...view details