தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம் -  பகீர் சிசிடிவி காட்சி!

சென்னை: விருகம்பாக்கத்தில் இரவு நேரங்களில் பட்டாக்கத்தியுடன் உலா வரும் கும்பல் பொது மக்களை அச்சுறுத்தியும், வாகனங்களைச் சேதப்படுத்தியும் வரும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

rowdism
rowdism

By

Published : Nov 28, 2019, 10:02 AM IST

சென்னை விருகம்பாக்கம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் தினமும் இரவு நேரங்களில் கையில் பட்டாக்கத்தியுடன் ஒரு கும்பல் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. தினந்தோறும் அவர்களது அட்டகாசம் தாங்கமுடியாமல் பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், காவலர்களின் ஜீப் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி சென்றுள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய் கிழமையன்றும் ரவுடி கும்பல் சுமார் அரை மணி நேரமாக, அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

பட்டாக்கத்தியுடன் திரியும் ரவுடி கும்பல்

மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். மக்களின் தொடர் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை வைத்து, ரவுடி கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறைச்செயலர் ஆஜாராக வேண்டும் - உயர் நீதிமன்றம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details