சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் உள்ள குபேர் மோட்டார்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இசக்கியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மனைவிக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக நண்பர் சக்திவேல் இசக்கியப்பன் குறித்து அவரது மனைவியிடம் தவறாக கூறிவந்துள்ளார். இது தெரியாமல் அப்பெண் தன்னை தவறாக பேசுவதாக காவல் நிலையத்தில் இசக்கியப்பன் மீது புகார் அளித்துள்ளார்.
பின்னர் காவல் துறையினர் இசக்கியப்பனை அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மீண்டும் அலுவலகத்திற்கு வந்த பிறகு இதுகுறித்து கேட்ட இசக்கியப்பனை, அவரது நண்பர் சக்திவேல் அப்படிதான் செய்வேன் எனக்கூறி தலையில் ஹெல்மெட்டால் பயங்கரமாக தாக்கியுள்ளார்.