கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை உள்ளது. நடப்புக் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கற்றல் செயல்பாடு தடைபடாத வண்ணம் இணையவழி மூலம் பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
அதனைச் செயல்படுத்தும்விதமாக தொண்டு நிறுவனத்தின் மூலமாக நான்காயிரத்து 790 கைப்பேசிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, அதனைப் பெற்றோரின் மேற்பார்வையில் கையாளும்விதம் பற்றி அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டன.