சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக காது கேளாத, வாய் பேச முடியாத உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னை எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் முதல்முறையாக மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். மாற்றுத் திறனாளிகளும் எல்லா விதமான பணியும் செய்ய முடியும், எல்லா இடத்திற்கும் சென்று வர முடியும் என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் பொதுப் போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கான சிறப்பு வசதிகள் உள்ளதா என்று அறிய முடியும்.
இதுதொடர்பாக அமர சேவா சங்கத்தின் செயலாளர் சங்கரராமன் பேசுகையில்: