சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை ஒருவர் முன்னதாக பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில், "தானும் அமைச்சரும் ஒன்றாக வாழ்ந்தோம். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி அவர் ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்து, அந்தரங்கப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்" என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மனு தள்ளுபடி
இதனிடையே, மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு நடிகை தரப்பிலிருந்தும், காவல் துறை தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.