தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை பெருநகர மாநகராட்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் மற்றும் மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது.