தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய மாநகராட்சியாக தாம்பரம் - தாம்பரம் மாநகராட்சி

பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவானது.

formation of tambaram corporation  tambaram corporation  corporation  new corporation  மாநகராட்சி  புதிய மாநகராட்சி  தாம்பரம் மாநகராட்சி  உருவாக்கப்பட்டது புதிய மாநகராட்சி
புதிய மாநகராட்சி

By

Published : Nov 13, 2021, 11:31 AM IST

தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை பெருநகர மாநகராட்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் மற்றும் மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்லபாக்கம் ,மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை

ABOUT THE AUTHOR

...view details