தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப்பணம் - சுங்கத்துறையினர் பறிமுதல் - வெளிநாட்டு பணம் விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் வெளிநாட்டுப் பணமானது சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் வெளிநாட்டு பணம் : சுங்கத்துறையினர் பறிமுதல்
துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.24.37 லட்சம் வெளிநாட்டு பணம் : சுங்கத்துறையினர் பறிமுதல்

By

Published : Jul 31, 2022, 7:23 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும், ’ஃபிளை துபாய் ஏா்வேஸ்’ பயணிகள் விமானம், இன்று(ஜூலை 31) காலை புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வுசெய்து, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், சென்னையைச்சேர்ந்த ஒரு பயணி சுற்றுலா விசாவில் துபாய் செல்வதற்காக வந்தார். அவர் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருடைய உடைமைகளை சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அவருடைய ட்ராலி பேக் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த ட்ராலி பேக்கில் ரகசிய அறை வைத்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த ரகசிய அறையைத்திறந்து பார்த்தபோது, அதற்குள் கட்டுகட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி, வெளிநாட்டுப்பணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் இந்திய மதிப்புக்கு 24.37 லட்சம் ரூபாய் இருந்தது. இதையடுத்து சுங்க அலுவலர்கள் வெளிநாட்டுப்பணத்தைப்பறிமுதல் செய்தனர்.

அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்தனா். அவரிடம் விசாரித்த போது, இந்தப் பணத்தை ஒருவர் தந்து துபாயில் உள்ள மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு வரும்படி தன்னை அனுப்பி வைத்ததாகவும், அதற்காகத்தான் தான் எடுத்து செல்வதாகவும் கூறினார். மேலும், தான் கூலிக்காக இந்த கடத்தல் வேளையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து சுங்க அலுவலர்கள் பயணியைக் கைது செய்தனா். மேலும், இந்தப் பணத்தை இவரிடம் கொடுத்து அனுப்பிய ஆசாமி யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details