சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி மற்றும் புழல் ஏரிகள் திறக்கப்பட்டதால் மணலி புதுநகர், திருவொற்றியூர் சடையன்குப்பம், கார்கில் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
புழல் ஏரியில் கடந்த 4 நாள்களாக 1,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் மற்றும் மாதவரம்-எண்ணூர் விரைவு சாலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.