தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளா மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு - Madurai Airport

பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட 5 விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 12, 2023, 3:54 PM IST

சென்னை: வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அந்த மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்குச் செல்லும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அந்த விமானங்கள் தாமதமாக வருவதாலும், விமானங்கள் தாமதமாக வந்த பின்பு விமானிகளின் பணி நேரம் முடிந்து அவர்கள் ஓய்வுக்குச் சென்று விடுவதாலும், விமானங்கள் இயக்க விமானிகள் இல்லாத நிலை ஏற்பட்டு சில விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. சில விமானங்கள் கால தாமதமாக இயக்கப்படுகின்றன.

அதேபோல் சென்னையில் இருந்து இன்று (ஜூலை 12) காலை 11:15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதுரையில் இருந்து பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2:25 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் மாலை 4:40 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மாலை 6:05 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகள் மாற்று விமானங்களில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதேபோல் இன்று (ஜூலை 12) காலை 6:30 மணிக்கு சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானம், காலை 7:30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானம், காலை 10:15 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானம், காலை 10:20 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானம், பகல் 1:10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானம் ஆகிய 5 விமானங்கள் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதோடு மேலும் சில விமானங்கள் ரத்து, தாமதம் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ் அன்னையின் தவப்புதல்வன் நா.முத்துக்குமார் - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

ABOUT THE AUTHOR

...view details