சென்னை:மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மொரிஸ்வா் பாடீல், நேற்று (ஜூலை 8) இரவு மதுரையில் இருந்து 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மதுரையிலிருந்து சென்னை நோக்கி இரவு 7 மணிக்கு வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலதாமதமாக இரவு 8.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இருப்பினும் உடனடியாக அமைச்சரை சென்னை விமான நிலைய செக்யூரிட்டி பிராஞ்ச் காவல்துறையினர், மும்பை செல்லவிருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் கவுண்டருக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் அலுவலர்கள், ‘போா்டிங் முடிந்து விட்டது. நீங்கள் தாமதமாக வந்துள்ளீா்கள்’ என்று கூறி அமைச்சரின் பயண முன்பதிவை ரத்து செய்தனர். இதனையடுத்து மத்திய இணை அமைச்சா் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் உள்ள விவிஐபி லவுஞ்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.