சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியிலுள்ள அமர் நகர் மற்றும் பெருங்களத்தூர் பகுதியான பாரதிநகர், கண்ணன் அவென்யூ, சேலையூர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, பூட்டியிருந்த வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
மேலும் இது தொடர்பாக புறநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருந்துள்ளது. இந்நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் அவர்களின் உத்தரவின்பேரில், சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படை காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததையடுத்து. அப்பகுதியைச் சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று பதுங்கியிருந்து கைது செய்தனர்.