சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக்கிடங்கில் நேற்று (ஏப்.27) மாலை தீ விபத்து ஏற்பட்டது. நுழைவுவாயில் அருகே ஏற்பட்ட தீ மளமளவென அருகிலுள்ள குப்பை மேடுகளுக்கும் பரவியது. இதனால், குப்பை கிடங்கின் ஒரு பகுதி முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணிகள் நடந்தன. இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு பணிகள் தொடரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ்குமார், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ்குமார், “நேற்று மாலை 3 மணியிலிருந்து தீயணைப்புப் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு, தற்போது தீ மேற்கொண்டு அருகிலுள்ள சதுப்பு நிலத்திற்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.