சென்னை அம்பத்தூர் சி.டி.ஹெச். சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.