சென்னை: மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் அபராதாம் வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்த நிலையில் மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று (ஜூலை 7) முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.