தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2022, 9:55 PM IST

ETV Bharat / state

முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.1,16,500 அபராதம் வசூல்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ஒரே நாளில் 1, 16,500 ரூபாய் அபராதம் வசூல்
முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ஒரே நாளில் 1, 16,500 ரூபாய் அபராதம் வசூல்

சென்னை: மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் அபராதாம் வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று (ஜூலை 7) முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அபராதம்

அதனடிப்படையில் மாநகராட்சியின் குழுக்களின் மூலம் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா உறுதி-மேலும் ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details