மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ‘பேபிபுளூ’ எனப்படும் வைரஸ் காய்ச்சலுக்கான ‘பேவிபிரவிர்’ என்ற மாத்திரையை தயாரிக்கிறது. இந்த மாத்திரையை கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அளித்ததில் பலன் கிடைத்துள்ளது.
குறிப்பாக, கரோனா வைரசின் ஆரம்ப நிலை மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு பேவிபிரவிர் மாத்திரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பேபிபுளூ காய்ச்சலுக்கு பலன் தரும் பேவிபிரவிர் மாத்திரைக்கு தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாத்திரை வழங்கப்படும்.