தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை தடயவியல் அலுவலகத்திற்கு வருகை - Fatima's father visits the forensic department office

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் செல்போன் மற்றும் லேப்டாப்பை அவரது தந்தை முன்னிலையில் தடயவியல் துறையினர் திறந்து பார்க்கவுள்ளனர்.

தடயவியல் துறை அலுவலகத்திற்கு வரும் பாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை
தடயவியல் துறை அலுவலகத்திற்கு வரும் பாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை

By

Published : Nov 27, 2019, 2:54 PM IST

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முதற்கட்டமாக கோட்டூர்புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து தற்கொலை தொடர்பான, செல்போன் பதிவுகளுடன் புகார் அளித்தார். இதனையடுத்து சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வழக்கை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று ஃபாத்திமா லத்தீப்பின் செல்போனை தடயவியல் துறை அலுவலகத்தில், அவரது தந்தை அப்துல் லத்தீப் முன்னிலையில் திறந்து காண்பிக்க உள்ளனர்.

தடயவியல் துறை அலுவலகத்திற்கு வரும் ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை

இதற்காக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் மற்றும் அவரது தங்கை ஆயிஷா லத்தீப் ஆகியோர் தடயவியல் துறை அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இருவரது முன்னிலையிலும் திறந்து பார்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடரந்து அப்துல் லத்தீப் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தியைச் சந்தித்து, பேச காவல் ஆணையர் அலுவலகம் செல்லவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:பிரதமரிடம் புகார் அளிக்கப் போகிறாரா ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை!

ABOUT THE AUTHOR

...view details